Friday, March 10, 2017

திருப்பூர், மார்ச் 7 -ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து நெடுவாசலில் பிப்.16ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நெடுவாசலில் போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக திருப்பூர் தலைமை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு அனைத்து பிஎஸ்என்எல் சங்கங்களின் சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எப்என்டிஇசங்கத்தின் மாநில உதவி செயலாளர் கே.தனபதி தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலஅமைப்பு செயலாளர் பி.சவுந்திரபாண்டியன், எம்எப்டிஇ சங்கத்தின் மாவட்ட உதவி செயலாளர் ஜெகன்னாதன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டசெயலாளர் வி.ராமமூர்த்தி, அலுவலர்கள் சங்கத்தின் கிளைச் செயலாளர் எம்.பழனிவேல் ஆகியோர் மத்திய அரசின் இந்த திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பேசினார்கள். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் கிளைச் செயலாளர் என்.குமரவேலன் நன்றி தெரிவித்தனர். இதில் மத்திய அரசுக்கு எதிராகவும், போராடும் மக்களுக்கு ஆதரவாகவும் கண்டன முழக்கங்கள்எழுப்பப்பட்டன.



ஆர்ப்பாட்டம்


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 15 பேர், கூட்டம் மற்றும் வெளிப்புறம்


தீக்கதிர் செய்தி
ரிலயன்ஸ் ஜியோ தனியார் நிறுவனத்துக்கு சலுகைகள்
ரத்து செய்ய வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோவை, மார்ச் 9-
தொலை தொடர்பு துறையில் ரிலயன்ஸ் ஜியோ தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்படும் சலுகைகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.பிஎஸ்என்எல் பங்குகளை தனியாருக்கு விற்க முயற்சிக்கும் மத்திய அரசின் கொள்கையை உடனடியாக கைவிட வேண்டும், 4ஜி சேவை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இலவசமாக அலைக்கற்றை வழங்க வேண்டும், ரிலயன்ஸ்ஜியோ தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்படும் சலுகைகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் சார்பில் கே.சந்திரசேகரன், ராபர்ட், பட்டாபிராமன் ஆகியோர் தலைமை வகித்தனர்.ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன், நிர்வாகிகள் பிரசன்னா, வேலுச்சாமி, செம்மல் அமுதம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உறையாற்றினர். இதில் ஏராளமான பிஎஸ்என்எல் ஊழியர்கள் கலந்து கொன்டனர்.

Tuesday, June 3, 2014

தீக்கதிர் செய்தி

பொள்ளாச்சியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் கண்டன ஆர்பாட்டம்

பொள்ளாச்சி,நவ. 21-
பொள்ளாச்சியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் கண்டன ஆர்பாட்டம் நடத்தினார்கள்.பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆகியோரின் நலன் சார்ந்த கோரிக்கைகள் சில ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் நிர்வாகம் கண்டு கொள்ளாத போக்கினை கடைபிடித்து வருகிறது. கோரிக்கைகளை உடனே நிறைவேற்றக் கோரி வரும் நவ.27 ம் தேதிஒரு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் செய்ய அறைகூவல் விடுக்கப்பட்டு உள்ளது. அதன்முன்னறிவிப்பாக பொள்ளாச்சியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். குறைந்த பட்ச போனஸ் வழங்கவேண்டும், 78.2 ஊதிய மாற்றத்தை ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.
ஊதிய தேக்கத்தை நீக்க வேண்டும். ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட 30அம்சக் கோக்கைகள் இவ்வார்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்குஜெயமணி தலைமை தாங்கினார்.நடராஜன் வரவேற்புரை ஆற்றினார். ஆர்.பிரபாகரன், எஸ்.மனோகரன், வி.சசிதரன், எம்.பிட்டோ அலெக்சாண்டர், இ.அருள்குமார், ஜி.சந்திரசேகர், எ.ரவிசந்திரன் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர்.


தினகரன் செய்தி



                                                                     தின மலர் செய்தி