Friday, December 31, 2010




பிஎஸ்என்எல் : விழுங்கத் துடிக்கும் கார்ப்பரேட்கள்

தீக்கதிர் கட்டுரை

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்னும் பிஎஸ்என்எல்-இல் டிசம்பர் 1 அன்று தொடங்கி டிசம்பர் 2 அன்றிரவு விலக்கிக் கொள்ளப்பட்ட வேலைநிறுத் தம் என்பது பிஎஸ்என்எல்-இல் வேலை செய்யும் மூன்று லட்சம் ஊழியர்கள், நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதையோ, விருப்ப ஓய்வு என்ற பெயரிலோ அல்லது வேறெந்த வகை யிலுமோ ஊழியர்களின் எண்ணிக்கை யை வெட்டிக் குறைப்பதையோ, ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள் என்கிற பிரகடனத்தின் அடையாளமாக அமைந் தது. பிஎஸ்என்எல் தொடர்புகளுக்காக வெகுகாலமாகக் காத்துக் கொண்டிருக் கும் வாடிக்கையாளர்களுக்குத் தேவை யான கைபேசி இணைப்புகளைக் கொள் முதல் செய்ய வேண்டியதன் அவசியத் தையும் வேலைநிறுத்தம் முன்னிலைப் படுத்தியது.

தனியாருக்குத் தாரைவார்த்தல்

ஐமுகூட்டணி-2 அரசாங்கமானது பொதுத்துறை நிறுவனங்களைத் தனி யாருக்குத் தாரை வார்க்கும் வேலை களை மிகத் துரிதகதியில் செய்யத் தொடங்கியது. சாம் பிட்ரோடா குழு அறிக்கையானது, பிஎஸ்என்எல் நிறு வனத்தில் 30 விழுக்காடு பங்குகளைத் தனியாரிடம் தாரை வார்த்திட வேண்டும் என்றும், ஒரு லட்சம் ஊழியர்களை வெட்டிக்குறைத்திட வேண்டும் என்றும், கேந்திரமான தனியார் ஒருவரைக் கூட் டாளியாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைகள் செய்திருந்தன. பிஎஸ்என்எல் ஊழியர்கள் இவற்றை முழுமையாக எதிர்த்து நின்றபோதிலும், பிஎஸ்என்எல் நிர்வாகம் ஏற்கனவே இந்தத் திசைவழியில் நடவடிக்கை களைத் தொடங்கி இருந்தது. பன்னாட்டு நிறுவனங்களும், இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களும், பிஎஸ் என்எல் நிறுவனத்தைத் தங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவந்தால் மட்டுமே நாட்டில் உள்ள டெலிகாம் துறையை முழுமையாகத் தாங்கள் வசப்படுத்திக் கொள்ள முடியும் என்பதால், பிஎஸ்என் எல் நிறுவனத்தையும் அதன் கோடிக் கணக்கான ரூபாய் சொத்துக்களையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொள்ள மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தன.

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு நாட் டின் அனைத்து நகரங்களிலும் மாநகரங் களிலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப் புள்ள சொத்துக்கள் கேந்திரமான பகுதி களில் அமைந்துள்ளன. அவற்றைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்ப திலேயே பன்னாட்டு நிறுவனங்களும், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களும் மிக வும் ஆர்வம் காட்டி வந்தன. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்காக அமைக்கப்பட்ட துறை யில், பிஎஸ்என்எல் நிறுவனத்தையும் அவ்வாறு தனியாருக்குத் தாரை வார்ப்பது என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருந்தது அனைவரும் அறிந்த உண்மை யாகும்.

சாம் பிட்ரோடா குழுவின் பரிந்துரை களை அமல்படுத்துவதற்காக டெலிகாம் துறையால் மற்றொரு குழு அமைக்கப் பட்டது. பிஎஸ்என்எல் ஊழியர்கள்/அதிகாரிகள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், பிஎஸ்என் எல் நிறுவனத்தினை எந்த விதத்திலும் தனியாருக்குத் தாரை வார்ப்பதை அனு மதிக்கமாட்டோம் என்று உறுதியுடன் கூறப்பட்டது. அதேபோன்று சுய ஓய்வு என்ற பெயரில் ஊழியர்களை வெட்டிக் குறைப்பதையும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறப்பட்டது. ஊழியர்களின் எதிர்ப்பையும் மீறி பிஎஸ்என்எல் நிறு வனத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்க அரசின் உயர்மட்ட அளவில் திட்டங்கள் தீட்டப்பட்டன.

இந்தப் பின்னணியில்தான் பிஎஸ் என்எல் ஊழியர்கள்/அதிகாரிகள் சங்கங் களின் கூட்டு நடவடிக்கைக் குழு கூடி, அரசின் ஊழியர் விரோத நடவடிக்கை களுக்கு எதிராக உறுதியான போராட்டத் திற்குச் செல்வது என்று தீர்மானித்தது.

டிசம்பர் 1 அன்று காலை 6 மணிக்கு வேலைநிறுத்தம் துவங்கியது. நாடு முழுதும் உள்ள பிஎஸ்என்எல் நிலையங் கள் மற்றும் அலுவலகங்கள் ஸ்தம்பித் தன. பல மாநிலங்களில் மாநில அளவி லான முதன்மை பொது மேலாளர்கள் கூட அலுவலகத்திற்கு வரவில்லை. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழி யர்கள் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட் டங்களிலும் ஈடுபட்டனர். கொல்கத்தா, தில்லி, சென்னை, பெங்களூரு, திரு வனந்தபுரம் மற்றும் பெரிய நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக் கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர். பின்னர் நிர்வாகம் கூட்டு நடவடிக்கைக் குழுத் தலைவர்களைப் பேச்சுவார்த் தைக்கு அழைத்தது. ஆயினும் கோரிக் கைகள் அரசுடனும் டெலிகாம் துறையுட னும் சம்பந்தப்பட்டதால் எவ்விதமான முடிவும் எடுக்கப்பட முடியவில்லை.

முதல் நாள் நடைபெற்ற வேலை நிறுத்தம் முழு வெற்றி பெற்றதால், சில இடங்களில் வேலை நிறுத்தத்தில் சேராத ஒரு சில ஊழியர்கள் கூட இரண் டாம் நாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற் றனர். கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைவர்களுடன் டெலிகாம் துறை செயலாளர் டிசம்பர் 2 அன்று காலை பேச்சுவார்த்தை நடத்தினார். ஆரம்பத் தில் அவர் விரிவான விவாதத்திற்குத் தயங்கியபோதிலும், பின்னர் முழுமையாக ஒத்துழைத்தார். பின்னர் பிஎஸ்என்எல் தலைவர்/மேலாண் இயக்குநருடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவரும் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தார்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தனி யாருக்குத் தாரைவார்த்திட தற்சமயம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கமாட் டோம் என்றும், ஊழியர்களை சுய ஓய்வில் வீட்டுக்கு அனுப்ப மாட்டோம் என்றும் அரசுத் தரப்பில்உறுதிமொழி அளிக்கப் பட்டது. மேலும் 15 மில்லியன் லைன்கள் வாங்குவதற்கான டெண்டரும் விரைவில் விடப்படும் என்று உறுதிதரப்பட்டது. 2007க்கு முன் ஓய்வுபெற்றவர்கள் தொடர்பான ஓய்வூதியத் திருத்தம் குறித்து மீள கேபினட் குறிப்பு அரசுக்கு அனுப்பப்படும் என்றும் உறுதிதரப்பட் டது. ஊதிய நிர்ணயம் தொடர்பாகவும் சங்கங் களுடன் கலந்து பேசி பிஎஸ்என்எல் போர்டுக்கு அனுப்பப்பட்டு, புதிதாக ஊதிய நிர்ணயம் செய்யப்படும் என்றும் உறுதிதரப்பட்டது.

பின்னர் கூட்டு நடவடிக்கைக் குழு 2010 டிசம்பர் 2 அன்றிரவு 8 மணிக்குக் கூடி அனைத்து அம்சங்களையும் பரிசீலனை செய்தபின் வேலைநிறுத் தத்தை விலக்கிக்கொள்வதென முடிவு செய்தது.

வேலைநிறுத்தத்தில் கிடைத்த படிப்பினைகள்

வேலைநிறுத்தத்தில் முன்வைக்கப் பட்ட கோரிக்கைகளில் ஓரிரண்டு ஊழியர்களின் நிதிக் கோரிக்கைகளாக இருந்த போதிலும், மற்றவை அனைத்தும் பிஎஸ்என்எல் வளர்ச்சியையும் விரிவாக் கத்தையும் உத்தரவாதப்படுத்தக் கூடிய வைகளாகும். அரசின் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான ஓர் அரசியல் வேலைநிறுத்தம் என்றுகூட இதனைக் கூற முடியும்.

அரசுத்தரப்பில் நிறுவனத்தைத் தனியாருக்குத் தற்போதைக்குத் தாரை வார்க்க மாட்டோம் என்றும், சுய ஓய்வில் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பமாட் டோம் என்றும் கூறப்பட்டிருந்தாலும் அவை தற்காலிகமானவைகள் மட்டுமே. அரசின் கொள்கைகளை முற்றிலுமாக முறியடிக்க வேண்டுமானால், அரசின் கொள்கைகளை மாற்றியமைக்கக்கூடிய விதத்தில் அனைத்துப் பகுதி மக்களை யும் இணைத்து வீரஞ்செறிந்த நீண்ட நெடிய போராட்டம் ஒன்றை நடத்த வேண் டியது அவசியம். இதற்கு மக்கள் மத்தி யில் மிகவும் சக்திவாய்ந்த விதத்தில் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டி யதும் அவசியம்.

டெலிகாம் துறை மிகவும் விரிவான தும் வளர்ச்சியடைந்து கொண்டிருப்பது மான ஒரு துறை. இதில் கிடைக்கும் லாபத்தை விழுங்குவதற்காக அரசாங்கம், பன்னாட்டு நிறுவனங்கள், பெரும் வர்த் தக நிறுவனங்கள் மற்றும் அரசியல் வாதிகளுக்கு இடையே மிக மோசமான வகையில் கூட்டணி அமைக்கப்பட்டுள் ளது. அவை பிஎஸ்என்எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களைப் பலவீனப்படுத்தினால்தான் தாங்கள் மக்களை முழுமையாகக் கசக்கி அதன் மூலம் கொழுக்க முடியும் என்பதால் அதற்கேற்ற வகையில் மிகவும் இழிவான முறையில் திட்டங்களைத் தீட்டிவரு கின்றனர். இவர்களின் இத்தகைய இழி முயற்சிகள் முறியடிக்கப்பட்டு, பிஎஸ்என் எல் நிறுவனம் பாதுகாக்கப்பட்டு வளர்த் தெடுக்கப்பட வேண்டும். தொழிலாளர் வர்க்கம் விழிப்புடனிருந்து, மக்களின் ஆதரவுடன் இப்போராட்டத்தை மேலும் தீவிரமான முறையில் முன்னெடுத்துச் சென்று, அரசின் மக்கள் விரோத, தொழி லாளர் விரோத நவீன தாராளமயக் கொள் கைகளை முறியடித்திட வேண்டும்.

கட்டுரையாளர் :

-வி.ஏ.என். நம்பூதிரி
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் தலைவர்,

தமிழில்: ச.வீரமணி


Privete BroadBand
Dinamalar News

Tuesday, December 21, 2010

பல்வேறு கோரிக்கை களுக்காக திருப்பூரில் பெருந்திரள் ஆர்பாட்டம்

கோவை மாவட்டத்தில் தேங்கிகிடக்கும் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்திடுக எனக்
கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் 21/12/2010 அன்று திருப்பூர் மெயின் தொலைபேசிநிலையத்தில்
நடைபெற்றது

TNTCWU -யின் முக்கிய கோரிக்கை களான
1.சமவேலைக்கு சமஊதியம்
2.பணிநிர‌ந்த‌ர‌ம்
3.ESI PF
போன்ற கோரிக்கைகள் TNTCWU வின் கோரிக்கை தினத்தின்
முக்கிய கோரிக்கைகளாக வைக்கப்பட்டது


ஆர்ப்பாட்டத்தினை தோழர் வாலீசன் தலைமைஏற்று நடத்தினார்
பல்லடம் தோழர் ரவி கோசமிட தோழர் ராமசாமி BSNLEU துவக்கிபேச
ஆர்பாட்டம் இனிதே ஆரம்பித்தது
ஆர்பாட்டத்தை மாவட்ட மாநில நிர்வாகிகளும் கிளைத்தோழர்களும்
வாழ்த்திப்பேசினர்,வாழ்த்தியோர் விப‌ரம்:=

தோழர்.முத்துக்குமார் TNTCWU கோவைமாவட்ட செயலர்
தோழர்.அண்ணாத்துரை BSNLEU கிளை செயலர் பி பி புதூர்
தோழர்.சண்முகம் TNTCWU மாவட்ட நிர்வாகி பல்லடம்
தோழர்.ஜோதிஸ் BSNLEU கிளை செயலர் கே பி புதூர்
தோழர்.நாகராஜன் BSNLEU பல்லடம்
தோழர்.ரமேஷ் TNTCWU மாவட்ட நிகர்வாகி கே பி புதூர்
தோழர்.வெள்ளிய‌ங்கிரி TNTCWU ப‌ல்ல‌ட‌ம்
தோழர்.சுந்த‌ர‌க்க‌ண்ண‌ன் TNTCWU மாநில நிர்வாகி பெருமாந‌ல்லூர்
தோழர்.காந்தி BSNLEU ப‌ல்ல‌ட‌ம்
தோழர்.முக‌ம‌து ஜாப‌ர் BSNLEU மாநில அமைப்புசெய‌லர் திருப்பூர்
தோழர்.க‌ணேச‌ன் BSNLEU அவினாசி
தோழர்.செல்ல‌த்துரை BSNLEU திருப்பூர்

ந‌ன்றியுரை
===========
தோழர்.க‌ந்த‌சாமி BSNLEU கே பி புதூர்





ஆர்பாட்டத்தின் முக்கிய கோரிக்கைகள்
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍======================================
1. ப‌த‌வி உய‌ர்வு வ‌ழ‌ங்கும் ப‌ணிக‌ளை விரைவுப‌டுத்து
2. ஏற்றுக்கொண்ட‌ மாறுத‌ல்க‌ளுக்கு உத்த‌ர‌விடுக‌
3. CSC CCC போன்ற‌ க‌டுமையான‌ வேலைப‌ளுவால்
ஊழிய‌ர்க‌ள் அவ‌திப‌டும்ப‌குதிக‌ளுக்கு கூடுத‌ல் ஊழிய‌ரை நிய‌மித்திடு
4. ஜுனிய‌ர் அக்க‌வுண்டண்ட‌ன்க‌ளுக்கு J A O அபிசியேற்றிங் வ‌ழ‌ங்கு
5. ஒப்ப‌ந்தஉழிய‌ர் பிர‌ச்சினைக‌ளை தீர்த்திடுக‌
(ஆட்குறைப்பு செய்யாதே,செக்கியூரிட்டி கேபிள் ப‌ணிக்கு நிய‌மித்திடு,ESI
PF உறுதிப‌டுத்து
6. ID கார்டு MRS கார்டு வ‌ழ‌ங்கிடுக‌
7. அனைத்து அலுவ‌ல‌க‌ங்க‌ளுக்கும் செக்கியூரிட்டி நிய‌மித்திடு
8. TM க‌ளுக்கு த‌ர‌ப்பட்டுள்ள‌ CDMA தொலைபேசிப‌ழுதுக‌ளை ச‌ரிசெய்து
944 வ‌ச‌திவ‌ழ‌ங்கு
9. TTA க‌ளின் PERSONAL PAY மெடிக‌ள் அல‌வ‌ன்ஸ் பிர‌ச்சினை தீர்த்திடு
10.அலுவ‌ல‌க‌ங்க‌ளிலும் ஊழிய‌ர்குடியிருப்பிலும் தேவையான‌ அடிப்ப‌டைவ‌ச‌தி
செய்திடுக‌
11.உட‌ல்ன‌ல‌குறைவால் எடுக்கும் விடுப்புக‌ளை ம‌றுக்காதே!
12.NIB ப‌குதியில் காபி வ‌ழ‌ங்குவ‌தில் பார‌ப‌ட்ச‌ம் காட்டாதே
13.J C M க‌வுன்சிலில் எடுத்த‌ முடிவுக‌ளை விரைவாக‌ அமுல‌க்கிடு
14.CSC இன்ஸ்பெக்க்ஷ‌‌ன் பொறுப்புக்கு நிய‌ம‌ன‌ம் செய்திடுக‌
CTO ‍_ல் சூப்ப‌ர்வைச‌ர் நிய‌மித்திடு

Friday, December 3, 2010

" பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு சிபிஎம் வாழ்த்து "

"தீக்கதிர் செய்தி"
சென்னை, டிச. 3-

பொதுத்துறை பிஎஸ் என்எல் நிறுவனத்தை பாது காக்க வேலைநிறுத்தப் போராட்டம் நடத்திய ஊழி யர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கட்சி யின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:-

பொதுத்துறை நிறுவன மான பி.எஸ்.என்.எல். பங்கு களை தனியாருக்கு விற்கும் முயற்சியை கைவிடவும், 3 ஜி அலைவரிசைக்கான உரிமக்கட்டணமாக பெற்ற ரூ.18,500 கோடியை மீண் டும் பி.எஸ்.என்.எல் நிறுவ னத்திற்கு திரும்ப வழங்கிட வும், கட்டாய ஓய்வூதியத் திட்டம் எனும் பெயரில் 1 லட்சம் ஊழியர்களை வீட் டுக்கு அனுப்பும் முயற்சி யை கைவிடவும், விரிவாக் கப் பணிகளை துரிதப்படுத் திடவும், லாபத்தில் இயங் கிடவும் அரசு உரிய நடவ டிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உள் ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்-ஊழியர்கள் அடங்கிய பி.எஸ்.என்.எல். தேசிய கூட்டுப் போராட் டக்குழு டிசம்பர் 1லிருந்து 3 நாட்களுக்கு வேலை நிறுத் தம் மேற்கொள்ள அறை கூவல் விடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந் தனர்.

இந்நிலையில் நிர்வாகத் துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் அடிப்ப டையில் கடைசி நாளான வெள்ளியன்று (டிசம்பர் 3) வேலை நிறுத்தத்தை கூட் டுப் போராட் டக் குழு ஒத்தி வைத்துள்ளது. பொதுத் துறை நிறுவனமான பி.எஸ். என்.எல். -ஐ பாதுகாக்க நடைபெற்ற இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு மார்க் சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது வாழ்த்துக் களைத் தெரிவித்துக் கொள் கிறது.

ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கோரிக்கை களுக்கு சுமூகத்தீர்வு காண் பதுடன், பொதுத்துறை நிறுவனமான பி.எஸ். என்.எல்.-ஐ பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை மேற் கொள்ள மத்திய அரசை மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற் குழு வலியுறுத்துகிறது.

Wednesday, December 1, 2010

வேலை நிறுத்தக்கட்சிகள்















.
.
.
.
.
.
.
.
.
.
.

STRIKENEWS IN "THE HINDU"
-------------------------------
Strike hits BSNL telephones

In Virudhunagar district

VIRUDHUNAGAR: Bharat Sanchar Nigam Limited landline and mobile phone services were affected in the district after its executives and non-executives commenced their three-day strike on Tuesday.

Local people said that though making local calls with the landline were possible, ‘zero' dialling service was not working.

Similarly, BSNL mobile phones conked off.

Majority of the executives and non-executives in the district participated in the strike protesting against attempts to disinvest the public sector telecom operator.

Expeditious rollout

They also wanted expeditious rollout of BSNL services, especially mobile services, without any delay in tendering process.

The unions were opposed to allowing private telecom operators using the copper cables of BSNL.

BSNL employees go on strike
=============================

TIRUCHI:
===========
Members of various employees and officers unions of the Bharat Sanchar Nigam Limited (BSNL) went on a three-day strike called by the Joint Action Council of BSNL All Officers and Employees Unions to press for their charter of demands, here on Wednesday.

The strike was called to protest the recommendations of the Sam Pitroda Committee and to press for various other demands. The committee has recommended 30 per cent divestment in BSNL .

A section of the striking employees staged a demonstration in the city to highlight their demands.

-----------------------------------------------------------------------------
Customer service centres at many places in district remained closed

on Wednesday.


--------------------------------------------------------------------------------



Kochi:
=======
Work at Bharat Sanchar Nigam Limited (BSNL) offices under Ernakulam Secondary Switching Area (SSA) came to a standstill after employees of the public sector major embarked on a stir, as part of a nation-wide strike, under the joint strike council from 6 a.m. on Wednesday.

The strike will be in effect until 6 a.m. on Saturday.

Local convenor of the joint strike council P. Balan said that the strike, demanding rejection of Sam Pitroda Committee recommendations including implementation of a voluntary retirement scheme for a lakh employees of the company and a stake sale of 30 per cent besides absorption of ITS officers into BSNL, was complete as employees kept off work.

“All executive and non-executive staff participated in the strike,” he said.

A.P. Honeykumar, district convenor of the strike council, said that customer service centres at Kalady, Angamaly, Aluva, Paravur, Njarackal, Kalamassery, Thrikkakara, Palarivattom and Kavarathy remained closed on the first day of strike.

Call centres

Also brought to a halt was the functioning of the call centre at boat jetty, special service exchange, revenue accounts wing at Catholic Centre and Thodupuzha and the main telephone exchanges at Palarivattom and Panampilly Nagar. Cable and telephone line maintenance work was affected. The employees on strike also took out demonstrations at BSNL Bhavan, Catholic Centre, Boat Jetty telephone Exchange, Kalamassery, Palarivattom, Aluva, Paravur, Muvattupuzha, Thodupuzha, Perumbavur, Kothamangalam, Kolancherry and Panampilly Nagar.

Counterclaim

While the strike council in a media release claimed that only the Principal General Manager (PGM) and the General Managers were present in office on Wednesday, E.M. Abraham, PGM, said that the stir had not affected work. “Roughly about 50 per cent of the employees attended office on the first day of strike,” he said.


BSNL employees begin strike
===============================

--------------------------------------------------------------------------------

Employees demand settlement of Indian Telecom Service absorption issue, among others

BSNL services largely remain uninterrupted despite strike


--------------------------------------------------------------------------------



GULBARGA: The executive and non-executive employees of Bharat Sanchar Nigam Ltd. (BSNL) began their three-day strike from 6 a.m. on Wednesday, demanding, among other things, settlement of the Indian Telecom Service absorption issue pending for long.

Memorandum

The employees affiliated to the Joint Action Committee of Associations/Unions of BSNL Executives and Non-Executives staged a demonstration in front of the office of the General Manager of BSNL in Gulbarga and also submitted a memorandum.

The other demands include: the management should not resort to retrenchment or offer voluntary retirement to the employees; the Government should not resort to disinvestment in BSNL and give up the move to privatise the company; and the management should not outsource the services offered by the firm.

BSNL services largely remained uninterrupted despite the total strike by its employees on Wednesday, except a few reports of disruption of service and non-attendance to complaints.

According to reports, the strike in Yadgir district was also complete.


Three-day BSNL staff stir begins
=========================================

KRISHNAGIRI:
------------


The three-day strike announced by the various unions of the BSNL employees and executives began on Wednesday.

The agitation was to urge the government to accept their 12-point charter of demands including repayment of 3G Spectrum licence fee as the government was yet to collect the licence fee from any other private operators in the country.

Not affected

However, the services were not affected in any part of the Dharmapuri Telecom Circle, which includes Krishnagiri and Dharmapuri revenue districts.

S. Alagirisamy, Telecom District Secretary of the BSNL Employees Union, told ‘The Hindu' that the strike was total in the district.

He said all the seven unions affiliated to various political parties participated in the strike.

All the three main telephone exchanges viz Krishnagiri, Hosur and Dharmapuri and other exchanges in Uthangarai, Harur, Pennagaram, Palacode and Denkanikottai remained closed on Wednesday


BSNL staff stir from today
--------------------------

KOLLAM: Officers and employees of Bharat Sanchar Nigam Ltd. (BSNL) will go on a three-day nation-wide strike from Wednesday, pressing their various demands. C. Muraleedharan, convener of the joint action committee for the strike, said more than 15,000 officers and employees would join the strike in Kerala.

Mr. Muraleedharan said the strike could seriously hit all BSNL services on the second and third days. The joint action committee is the umbrella organisation for seven unions of the BSNL officers and employees. They are the BSNLEU, NUBSNL, NFTE, TEPU, BSNLMS, SNEA and the AIBSNLEA.

A charter of eleven demands has been placed before the government. The demands included dropping moves to divest BSNL, withdrawal of voluntary retirement scheme and return of Rs.18,500 crore given to the government



"NEWS THE HINDU"

Sunday, November 28, 2010

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு எதிரான ஆர்பாட்டம்


Bharat Sanchar Nigam Limited Employees Union stage a demonstration in front of BSNL deputy general manager's office in Tirupur on Saturday. –

Tirupur: Telecom employees, affiliated to Bharat Sanchar Nigam Limited Employees Union (BSNLEU), have demanded immediate cancellation of licenses given to all non-telecom companies during the 2G spectrum allocation, among other issues.

To highlight the demands, the staff staged a demonstration in front of the BSNL deputy general manager's office here on Saturday.

BSNLEU circle organising secretary Mohammed Jaffer said that the Union Government should conduct an impartial inquiry into the allegations pertaining to spectrum allocation to bring out the truth behind it.

“Apart from cancelling the licenses of non-telecom companies who got benefitted in the 2G deal, the government should recover the difference amount in the valuation of spectrum from the other companies,” he added.





-
-
-
-
-
-
2ஜி ஊழல்: இழப்புகளை கைப்பற்றுக!
-----------------------------------------------
-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
---------------------------------------------------
மிகப் பிரம்மாண்டமான அளவில் நடை பெற்றுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் விவரங் கள் வெளிவந்துகொண்டிருக்கக்கூடிய சூழ லில், அதனை விசாரிப்பதற்காக கூட்டு நாடா ளுமன்றக் குழுவை அமைத்திட வேண்டு மென்கிற கோரிக்கை தொடர்பாக நாடாளுமன் றத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலை எப்படித் தீர்வு செய்யப்பட்டாலும், நாடு சட்ட விரோத முதலாளித்துவத்தின் (உசடிலே உயயீவையடளைஅ) ஆழமான பகுதிக்குள் மேலும் மேலும் தள் ளப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தெளிவு.

சட்டவிரோத முதலாளித்துவம் என்றால் என்ன? மூலதனம், லாபத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமென்கிற அரிப் பின் காரணமாக, நாட்டில் உள்ள அனைத்து விதிமுறைகளும் சற்றே வளைந்து கொடுக்க வேண்டும் என்று விரும்பும். அவ்வாறு அவை வளைந்து கொடுக்காவிட்டால் அவற்றை மீறும். ஒப்பந்தங்களை அளிப்பதில் உற்றார் உறவினர்களுக்கு உதவுவது, (உதாரணமாக, பொதுத்துறை நிறுவனங்களான பால்கோ மற்றும் மும்பை, ஜூஹூ, செண்டார் ஓட் டலை முந்தைய தேசிய ஜனநாயகக் கூட் டணி அரசாங்கம் அடிமாட்டு விலைக்குத் தாரை வார்த்தமை போன்று) நாட்டின் பொதுச் சொத்துக்களை இதயத்திற்கு இதமானவர் களுக்குத் தர முன் வருவது, பணத்தைப் பன் மடங்கு பெருக்குவதற்காக சட்டவிரோத வழிவகைகளைக் கண்டறிவது மற்றும் பொதுச் சொத்துக்களைச் சூறையாடுவது முத லியன சட்டவிரோத முதலாளித்துவத்தின் ஒருசில வடிவங்களாகும். முதலாளித்துவ அரசு, முதலாளிகள் சரிசமமாக போட்டி போட் டுக்கொண்டு இயங்குவதற்காக ஒருசில விதிமுறைகளையும் அவற்றை செயல்படுத் தும் நிறுவன ஏற்பாடுகளையும் மேற்கொள் கிறது. ஆயினும் சிறிய மீன்களை பெரிய மீன் கள் தின்பதைப் போன்ற அடிப்படையிலேயே இயற்கை குணத்தைக் கொண்டுள்ள முதலா ளித்துவம், இத்தகு விதிமுறைகளையெல் லாம் தூக்கிக் குப்பையில் வீசி எறிந்துவிடு கிறது. முதலாளித்துவம் என்பது இயல்பா கவே சட்டவிரோதமான நடவடிக்கைகளை ஊட்டி வளர்க்கிறது.

இந்தியா போன்ற நாடுகளில் உலக முத லாளித்துவம் தாமதமாக நுழைந்தபோது (குறிப்பாக அவை உலகமயம் என்னும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளைத் தழுவிக்கொண்ட பின்பு) இத்தகைய சட்ட விரோத நடவடிக்கைகள் அரசாங்கத்தின் நிறு வனங்களிலும் ஊடுருவிப் பரவின. உண்மை யில் ஒட்டுமொத்த அரசாங்கமே அவ்வாறு மாறிப்போனது.

உச்ச நீதிமன்றம், பிரதமரையும் அவரது அலுவலகத்தையும் கூண்டில் ஏற்றக்கூடிய அளவிற்கு நடைபெற்றுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் அதன் வெளிப்பாடுதான்.

சட்டவிரோத முதலாளித்துவம், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் எந்த அளவிற்கு செயல் பட்டிருக்கிறது, எப்படிச் செயல்பட்டிருக் கிறது என்பதைச் சற்றே விளக்கிடலாம்.

2008 ஜனவரியில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை வெளியிடுவதற்கான உரிமங்களை அளிப்பதற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது முற்றிலும் விந்தையான, எவருக்கும் விளக்கமுடியாத ஒரு விதியைக் கையாண்டது. அதாவது ‘முத லில் வருபவருக்கு முதலில் விநியோகிப்பது’ என்ற முறையைக் கொண்டு வந்தது. அது மட்டுமல்ல, அந்த 2ஜி உரிமங்களை 2001இல் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே தருவது என் றும் முடிவு செய்தது. நுகர்வோருக்கு ஸ்பெக்ட் ரம் அதிக விலையுள்ளதாக ஆகிவிடக் கூடாது என்பதற்காகவும், அதன்மூலம் கிடைக்கும் ஆதாயங்கள் நுகர்வோரைச் சென் றடைய வேண்டும் என்பதற்காகவும் அவ் வாறு முடிவு மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சகம் அதற்கு விளக்கம் அளித்தது. ஆனால், உரிமங்கள் அளிப்பதற்கான விதி முறைகள் மற்றும் நிபந்தனைகள் மூலமாக இவற்றை உத்தரவாதம் செய்திடவில்லை. விளைவு, உரிமங்களைப் பெற்ற நபர்கள் இவற்றை மிகவும் கொள்ளை லாபத்திற்கு விற்றனர்.

ஐக்கிய அரபுக் குடியரசைச் சேர்ந்த டெலி காம் நிறுவனமான எடிசலாட் (நுவளையடயவ)டிற் கும், மும்பையைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திற் கும் இடையேயான பேரம் மிகவும் பிரம்மாண் டமான தொகைக்கு நடைபெற்றிருக்கிறது. ஸ்வான் டெலிகாம் நிறுவனமானது 13 மாநி லங்களுக்கு (உசைஉடநள) உரிய உரிமங்களை வெறும் 1,537 கோடி ரூபாய்க்கு வாங்கியது. பின் னர், இதில் எவ்விதமான உட்கட்டமைப்பு வசதியையும் செய்யாமலேயே, இவற்றில் 45 விழுக்காட்டினை எடிசலாட் நிறுவனத்திற்கு 900 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் 4,000 கோடி ரூபாய்க்கு) விற்றுவிட்டது. எனவே இவ்வாறு ஸ்பெக்ட்ரம் அலைக்கற் றையின் அப்போதைய சந்தை விலையாக சுமார் 2 பில்லியன் டாலர் இருந்திருக்கிறது. ஆனால் அதற்கு ஸ்வான் கொடுத்த விலை வெறும் 300 மில்லியன் டாலர்களேயாகும். தற்போதைய பரிவர்த்தனை விகிதாசாரத்தின் படி, இதன் பொருள் என்னவெனில் ஸ்வான் நிறுவனம் 2008 ஜனவரியில் கொடுத்த தொகைக்கு, அதைவிட 5.9 மடங்கு அதிக மதிப்புள்ள அலைக்கற்றைகளைப் பெற்றிருக் கிறது என்பதாகும். இவ்வாறு ஸ்வான் நிறு வனம் தான் பெற்ற உரிமங்களைச் செயல் படுத்த ஒரு காசு கூட செலவழிக்காமல், கொள்ளை லாபத்தை ஈட்டியிருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் அரசாங்கம் தான் பெற வேண்டிய தொகையில் ஆறில் ஒரு பங்கினை மட்டும் பெற்றது. இவ்வாறு அரசின் கஜானாவிற்கு வரவேண்டிய தொகையில் 4,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

இழப்பு என்பது இதோடு நின்றுவிடவில் லை. இந்த இழப்பு கூட குறைந்த மதிப்பீடு தான். இதனை இதற்கு அடுத்து நடைபெற் றுள்ள யூனிடெக் - டெலினார்(நார்வே) பேரத் துடன் ஒப்பிட்டால் தெரிந்து கொள்ள முடியும். யூனிடெக் நிறுவனமும், ஸ்வான் நிறுவனம் போன்றே உரிமத்தை நிறைவேற்றுவதற்காக ஒரு காசு கூட செலவழிக்கவில்லை. யூனி டெக் நிறுவனம் தான் பெற்ற 23 மாநிலங்களுக் கான உரிமங்களுக்கும் வெறும் 1651 கோடி ரூபாய் உரிமக் கட்டணமாகக் கொடுத்திருந் தது. பின்னர் இது டெலினார் நிறுவனத்திற்கு தான் பெற்றதில் 60 விழுக்காட்டு பங்குகளை மட்டும் 6,120 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது. இவ்வாறு யூனிடெக் நிறுவனம் அரசுக்கு அளித்ததைவிட ஏழு மடங்கு அளவிலான தொகையைப் பெற்றிருக்கிறது.

இவ்வாறு ‘முதலில் வருபவருக்கு முத லில் விநியோகிப்பது’ என்ற அடிப்படையில் உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் உண்மை யில் டெலிகாம் வணிகத்துடன் தொடர்புள்ள வைகள் அல்ல. இவை இதற்கு முன் அறியப் படாத அல்லது பெயரளவிலான நிழல் நிறு வனங்களாகும். இதுவும் இந்நிறுவனங்களின் நம்பகத்தன்மைகள் (bடியே கனைநள) குறித்து ஐயங்களை எழுப்பின.

எனவேதான் நாட்டின் நலன் கருதி, இவ் வாறு நடைபெற்றுள்ள இமாலய அளவு ஊழல் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று கூறுகிறோம். அதற்காகக் கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட வேண்டும் என்கிறோம். கூட்டு நாடாளுமன்றக் குழுவானது, இக் கூட்டுக் கொள்ளையில் பங்கு கொண்டவர்களை அடையாளம் காண்பது மட்டுமல்ல, அவர்களுக்கு உரிய தண்டனைகளைப் பெற் றுத்தரவும் வேண்டும். மேலும், இவ்வாறு இமா லய அளவில் ஊழல் நடைபெற்ற முறையை நன்கு ஆய்வு செய்து, எதிர்காலத்தில் இது போன்று நடைபெறாதிருக்க எவ்விதத்தில் மாற்றியமைக்கப் பட வேண்டும் என்றும் அது கூறிட வேண்டும். இவ்வாறு செய்வதானது, எதிர்காலத்தில் ஊழலை முற்றிலுமாக ஒழிக்க முடியாவிட்டாலும் அதன் அளவைக் குறைத் திட உதவிடும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசார ணை நடைபெற வேண்டும் என்று கோருவது நாட்டின் அரசியல் அறநெறியை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. இதில் நடைபெற்ற ஊழல் காரணமாக அர சுக்கு 1 லட்சத்து 76 ஆயிரத்து 379 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறைத் தலை வர் (சிஏஜி) மதிப்பிட்டிருக்கிறார். நாம் இந்த ஊழல் காரணமாக சுமார் 1 லட்சத்து 90 ஆயி ரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக பலமுறை குறிப்பிட்டிருக்கிறோம். இந்தத் தொகையை மீளப் பெறக்கூடிய வகையில் விசாரணைஅமைந்திட வேண்டும். அடிமாட்டு விலைக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களைப் பெற்றவர்கள் உரிய தொகை யினை அரசுக்குச் செலுத்திட வேண்டும். இதற்கு, தற்போது 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலமிட்ட தொகையினை ஓர் அளவுகோலாக (நெnஉாஅயசம) வைத்துக் கொள்ளலாம். இதனை ஏற்க மறுத்திடும் நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்துவிட்டு, அந்த உரிமங்களைப் புதி தாக ஏலமிட வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம், எவ்வித கூச்சநாச்சமின்றி, மிகவும் கேடுகெட்ட முறையில் கொள்ளையடிக்கப் பட்டுள்ள பொதுச் சொத் துக்களை மீளப்பெறுவதன் மூலம், பொது அற நெறியை (யீரடெiஉ அடிசயடவைல) மீள உறுதிசெய்வது மட்டுமல்ல, இவ்வாறு கைப்பற்றப்படும் தொகை, நாட்டு மக்களின் பெரும்பகுதியினரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திட மிகவும் தேவையான ஒன்றுமா கும். உதாரணமாக, உணவுப் பாதுகாப்பை எடுத்துக் கொள்வோம். நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பத்தின ருக்கும் (வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள்/ வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும்) உணவு தானியங்களை கிலோ 3 ரூபாய் என்ற விலையில் அளித்திட் டால், அதன் மூலம் கூடுதலாக 84 ஆயிரத்து 399 கோடி ரூபாய் உணவு மானியம் அளிக்க வேண்டும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரத்தில் அடிக்கப்பட்டுள்ள கொள்ளையோடு ஒப்பிடும்போது இது அதில் பாதி அளவுத் தொகையேயாகும். எனவே இத்தொகையை மீளக் கைப்பற்றுவதன் மூலம் நாட்டின் உணவுப் பாதுகாப்பை உத்தர வாதப்படுத்த முடியும். அதேபோன்று, நாட்டில் அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டும் என்றால், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆண் டிற்கு 34 ஆயிரம் கோடி ரூபாய் வீதம் மொத் தம் 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்று தேசிய கல்வித் திட்டம் மற்றும் நிர்வாகத் தேசிய நிலையம் (சூஐநுஞஹ-சூயவiடியேட ஐளேவவைரவந கடிச நுனரஉயவiடியேட ஞடயnniபே யனே ஹனஅinளைவசயவiடிn) மதிப்பிட்டிருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக் கீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள தொகை யைவிட இது குறைவேயாகும். இந்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள சுகாதாரத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை விட 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் அடிக்கப்பட்டுள்ள கொள்ளை ஆறு மடங்கு அதிகமாகும்.

ஆட்சியாளர்கள் இப்போதும் தாங்கள் சாமானியர்களுக்காகவே ஆட்சி செய்வதாக நாடகமாடுவது தொடர்கிறது. இவர்கள் நாட் டின் வளங்களைக் கொள்ளையடித்தவர்களி டமிருந்து அவற்றை மீளக் கைப்பற்றுவதற் கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிர்ப்பந்திக்க வேண்டும். மேலும், இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட தொகையினை அரசு மீண்டும் கைப்பற்றி, அவற்றை மிகவும் தேவைப்படும் நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பு, கல்வி மற்றும் சுகாதாரத்திற்குப் பயன்படுத்த ஒதுக்க வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி

Monday, November 15, 2010

பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்காதே

16/11/2010 தீக்கதிர்செய்தி

தில்லி பேரணி எச்சரிக்கை
புதுதில்லி, நவ. 15-

பிஎஸ்என்எல் நிறுவனத் தைத் தனியாருக்குத் தாரை வார்க்க ஒருபோதும் அனுமதி யோம் என்று பிஎஸ்என்எல் ஊழியர் சங்க பொதுச் செயலா ளர் அபிமன்யு கூறினார்.

பிஎஸ்என்எல் நிறுவனத் தில் உள்ள பிஎஸ்என்எல் எம்ப் ளாயீஸ் யூனியன் (நம்பூதிரி), என்எப்டிஇ, எப்என்டிஓ, தொமுச உட்பட அனைத்து ஊழியர் சங்கங்களும் அதிகாரி கள் சங்கமும் இணைந்துள்ள கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பில் தலைநகர் தில்லியில் மாபெரும் பேரணி நடைபெற் றது. பேரணி புதுதில்லி, ஜன்பத் சாலையில் உள்ள பிஎஸ் என்எல் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு, நாடாளுமன்ற வீதி நோக்கி வந்தது. அங்கு நடை பெற்ற கூட்டத்தில் பேரணி -ஆர்ப்பாட்டத்தை வரவேற்று கூட்டு நடவடிக்கைக் குழுவின் கன்வீனர் விஏஎன். நம்பூதிரி உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடா ளுமன்ற மக்களவைக் குழுத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா பேரணியைத் துவக்கி வைத்து உரையாற்றினார். பிஎஸ்என்எல் எம்ப்ளாயீஸ் யூனியன் (நம்பூ திரி) சங்கத்தின் பொதுச் செய லாளர் அபிமன்யு உட்பட அனைத்து சங்கங்களின் தலை வர்களும் உரையாற்றினர். பேரணியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரை வார்த்திடும் வகையில் அரசு நடவடிக்கைகள் மேற் கொண்டு வருவதைக் கண்டித் தும், பிஎஸ்என்எல் நிறுவனத் தைப் பாதுகாத்திடவும் வரும் டிசம்பர் 1 முதல் 3 தேதி வரை 72 மணி நேரம் வேலை நிறுத் தத்தில் ஈடுபடப் போவ தாக அறிவிக்கப்பட்டது.

பேரணியில் உரையாற்றிய அபிமன்யு கூறியதாவது:

இந்தப் பேரணி பிஎஸ் என்எல் நிறுவனத்தைப் பாது காப்பதற்காகவும், வலுப்படுத் துவதற்காகவும் ஊழியர்களும், அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்டுள்ள போராட் டத்தின் ஒரு பகுதியேயாகும். பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு எதிரான மத்திய அரசின் தவ றான கொள்கைகள்தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நிலைமைகள் மோசமாகிக் கொண்டிருப்பதற்குக் காரண மாகும். கடந்த ஐந்தாண்டு களாகவே அரசாங்கம், புதிய உபகரணங்களை வாங்குவதற் கான அனுமதியை பிஎஸ் என்எல் நிறுவனத்திற்குத் தர மறுத்து வருகிறது. 2006ஆம் ஆண்டில் 45 மில்லியன் லைன் கள் பெற்றிட டெண்டர் வெளி யிட்டிருந்தோம். அதனை அர சாங்கம் ரத்து செய்தது. பின்னர் 93 மில்லியன் லைன்கள் பெற டெண்டர் விட்டிருந்தோம். அதனையும் அரசாங்கம் ரத்து செய்தது. இப்போது சமீபத்தில் 5.5 மில்லியன் லைன்களுக்கான டெண்டரும் விட்டிருந்தோம். இதனையும் அரசாங்கம் ரத்து செய்துள்ளது. அதே சமயத்தில் தனியார் கம்பெனிகள் ஒவ் வோராண்டும் புதிதாக உபகர ணங்கள் மற்றும் கருவிகள் வாங்கவும் புதிய தொழில்நுட் பங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் அரசு அனுமதி அளித்து வருகிறது. இதுவே பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிலைமைகள் மோசமாகிக் கொண்டிருப்பதற்குக் காரண மாகும். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

பிஎஸ்என்எல் நிறுவனம் கிராமங்களில் சேவை செய் வதற்காக தனியார் நிறுவனங் களிடமிருந்து இழப்பீடு பெற்று வந்தது. ஒவ்வோ ராண்டும் ஆறாயிரம் ரூபாய், ஏழாயிரம் ரூபாய் என பெற்று வந்தது. இதனைத் தரவேண் டாம் என்று தனியார் நிறுவ னங்களுக்கு டிராய் அமைப்பு மூலம் அரசு கூறிவிட்டது. இத் தகைய பிஎஸ்என்எல் நிறுவனத் திற்கு எதிரான அரசின் கொள் கையை அனுமதிக்க முடியாது.

பிஎஸ்என்எல் நிறுவனம் சீன நிறுவனம் ஒன்றிடமிருந்து ஆர்டர்களைப் பெற ஒரு டெண்டரை இறுதிப்படுத்தியி ருந்தது. ஆனால், இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனு மதி தரவில்லை. சர்வதேச எல்லையில் அப்பணிகள் நடப் பதால் அதற்கு அனுமதி தரப் படவில்லை என்று காரணம் கூறியிருந்தது. ஆனால் அதே சீன நிறுவனமானது ரிலை யன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந் தம் செய்து கொள்ள அனுமதி தரப்பட்டிருக்கிறது. தனியா ருக்கு என்றால் ஒரு கொள்கை, பிஎஸ்என்எல்க்கு என்றால் வேறொரு கொள்கையா? பிஎஸ்என்எல்-க்கு எதிரான அரசின் இத்தகைய கொள் கைகளால்தான் பிஎஸ்என்எல் நிறுவனம் நலிவடைந்து வரு கிறது.

அரசாங்கம், பிஎஸ்என்எல் நிறுவனப் பங்குகளில் 35 விழுக்காட்டைத் தனியாருக்குத் தந்திட முடிவு செய்துள்ளது. மேலும் ஒரு லட்சம் ஊழியர்க ளையும் வீட்டிற்கு அனுப்பிட திட்டமிட்டுள்ளது. இவை அனைத்தும் பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்காக மேற் கொள்ளப்படும் நடவடிக்கை களே.

இதனை நாங்கள் அனுமதி யோம். இதனை எதிர்த்துத்தான் வரும் டிசம்பர் 1,2,3 தேதிகளில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழி யர்களும், அதிகாரிகளும் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளோம்.

இவ்வாறு அபிமன்யு கூறி னார். (ந.நி.)

Thursday, October 28, 2010

பிஎஸ்என்எல்-ஐ பாதுகாப்போம்

-எஸ்.மோகன்தாஸ்


செல்போன் சேவையில் 1995ஆம் ஆண்டிலேயே தனியார் நிறுவனங்கள் அனு மதிக்கப்பட்டன. அரசுத்துறை நிறுவனமான டிஓடி-யும் பொதுத்துறை நிறுவனமான எம்டி என்எல்-ம் செல்போன்சேவை தருவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளையும், திறமையான ஊழியர்களையும் கொண்டிருந்தன. ஆனால் அவை செல் சேவையில் ஈடுபட அரசாங்கம் தடை விதித்தது. ஏழு ஆண்டுகள் வரை இந்த தடை நீடித்தது. இந்த 7 ஆண்டுகளில் தனியார் நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சந் தையில் தங்களை பெருமளவு நிலைநிறுத்திக் கொண்டன. இந்த ஏழு ஆண்டுகளில் தனி யார் நிறுவனங்கள் கட்டண வகையில் அடித்த கொள்ளை சொல்லி மாளாது. 1.10.2000ல் இருந்து டிஓடி பொதுத்துறை நிறுவனமாக, பிஎஸ்என்எல் ஆக மாற்றப்பட்டது. நீதிமன் றம் வரை சென்று போராடி கடைசியாக 2002 ஆம் ஆண்டில்தான் செல்சேவை துவங்குவ தற்கு பிஎஸ்என்எல் அனுமதி பெற்றது. ஏழு ஆண்டுகள் கழித்து சேவையைத் துவங்கினா லும், 3.5 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிக ளின் கடுமையான உழைப்பினாலும், பொதுத் துறை மீது நமது மக்களுக்கு இருக்கிற அசைக்க முடியாத நம்பிக்கையினாலும் பி எஸ்என்எல் மளமளவென்று முன்னேறியது. ஆண்டொன்றுக்கு 25 சதம் வளர்ச்சியைக் கண்டது. 2006ஆம் ஆண்டிலேயே முதல் இடத்தில் இருந்த ஏர்டெல் நிறுவனத்தைத் தொட்டுப் பிடிக்கும் நிலைக்கு முன்னேறி இரண்டாம் இடத்தில் இருந்தது. 2007 மார்ச் மாத வாக்கில் ஏர்டெல் நிறுவனத்தைப் பின் னுக்குத்தள்ளி முதல் இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்த கதையோ அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.

தயாநிதி மாறன், தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது 45 மில்லியன் புதிய இணைப்புகளுக்கான கருவிகள் வாங்க டெண்டர் விடப்பட்டிருந்தது. பிஎஸ்என்எல்-ஐ முடக்குவதற்காக, நோக்கியா நிறுவனம் டெண்டருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது. வழக்கின் தீர்ப்பு பிஎஸ்என்எல்க்குச் சாதகமா கவே அமைந்தது. எனவே டெண்டர் இறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். இடையில் குடும்பச் சண்டை காரணமாக தயாநிதி மாறன் அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற்றப் பட்டு, ஆ.ராசா அமைச்சராக்கப்பட்டார். தயா நிதி மாறன் போட்ட டெண்டரை ரத்து செய்வ தாகவும் புதிய டெண்டர் விடப்போவதாகவும் அறிவித்தார். கருவிகள் வாங்க முடியாமல், புதிய இணைப்புகள் தர முடியாமல் பிஎஸ் என்எல் தத்தளிக்க விடப்பட்டது. இந்த இடைவெளியைப் பயன்படுத்தி தனியார் நிறு வனங்கள் வேகவேகமாக முன்னேறின. இரண்டாம் இடத்திலிருந்து முதலிடத்தைப் பிடித்திருக்க வேண்டிய பிஎஸ்என்எல், திட் டமிட்டுச் செய்யப்பட்ட சதி மற்றும் துரோகம் காரணமாக நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரண்டாம் தலைமுறை (2ஜி) ஸ்பெக்ட்ரம் விற்பனையில் வழக்கமாகப் பின்பற்றப்பட வேண்டிய ஏலம் விடும் நடைமுறை பின்பற் றப்படவில்லை. அமைச்சர் ராசாவினால் ‘முதலில் வந்தவர்களுக்கு முதலில் விற்ப னை’ என்ற புதிய முறை பின்பற்றப்பட்டது. இதனால் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை பிஎஸ்என்எல்க்கு இழப்பு ஏற்பட்டது. இந்த ஸ்பெக்ட்ரம் விற்பனையில் கடுமையான முறைகேடுகளும் ஊழலும் நடந்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அப்போது முதன்மை ஊழல் கண்காணிப்பு ஆணைய ராக இருந்த பிரத்யூஷ் சின்கா, இந்த ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட் டார். இதையொட்டி சிபிஐ, சஞ்சார் பவனில் சோதனையும் நடத்தியது. தலைமை தணிக் கை அதிகாரி, தொலைத்தொடர்பு அமைச்ச கம் எடுத்த முடிவுகள் மீது எழுப்பியுள்ள கேள் விகள், முறைகேடுகள் நடந்துள்ளதை உறு திப்படுத்துகின்றன. நல்ல லாபத்திற்கு விற் கப்பட்டிருக்க வேண்டிய 2ஜி ஸ்பெக்ட்ரம், அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

2010ஆம் ஆண்டில் பிஎஸ்என்எல் விரி வாக்கத்துக்காக 93 மில்லியன் இணைப்பு களுக்கான டெண்டர் விடப்பட்டிருந்தது. இந்த முறை மோட்டோரோலா நிறுவனம் வழக்குத் தொடுத்தது. போதாக்குறைக்கு பிரத மர் மன்மோகன்சிங் தனது தொலைத்தொடர்பு ஆலோசகர் சாம்பிட்ரோடா தலைமையில் அமைத்திருந்த கமிட்டி, இந்த டெண்டரை ஒட்டுமொத்தமாக ரத்து செய்யவும், ஒரு லட் சம் ஊழியர்களை விருப்ப ஓய்வில் அனுப்ப வும், பிஎஸ்என்எல்-ன் 20 சதவீத பங்கு களை விற்பனை செய்யவும் பரிந்துரை செய் தது. இந்தப் பரிந்துரைகள் மத்திய அரசாங்கத் தின் நோக்கங்களை தோலுரித்துக் காட்டின.

இதற்கிடையில் 3ஜி ஸ்பெக்ட்ரம் கட்ட ணம் என்ற பெயரில் பிஎஸ்என்எல் நிறுவனத் திடமிருந்து 18,500 கோடி ரூபாயை அதாவது பிஎஸ்என்எல் வசம் இருந்த உபரி நிதி முழு வதையும் அரசாங்கம் பறித்துக் கொண்டுள்ளது. எந்த ஒரு தனியார் நிறுவனமும் இவ்வளவு பெரிய தொகையைக் கட்டவில்லை. ஆனால் மத்திய அரசாங்கத்தின் சமூக, பொருளாதாரக் கடமைகளை அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுத்தும் பிஎஸ்என்எல் நிறுவனத் துக்கு ஸ்பெக்ட்ரம் கட்டணத்திலிருந்து விலக்கு அளிப்பதற்குப் பதிலாக, கடுமையாக நிர்ப்பந் தித்து அதன் கையிருப்பு நிதி முழுவதையும் அபகரித்துக்கொண்டு ஒரு திவால் நிலைக்கு அரசாங்கம் தள்ளிவிட்டுள்ளது.

கடந்த 20 வருடங்களாக மத்தியில் ஆட் சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் விடாப்பிடியாகப் கடைப்பிடித்து வரும் தனி யார்மய, தாராளமய, உலகமயப் பொருளாதாரக் கொள்கையின் விளைவாகவே பொதுத்துறை நிறுவனங்களும், பிஎஸ்என்எல்-ம் குறி வைத்துத் தாக்கப்படுகின்றன. இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாகவே ஓய்வூதியமும், ஓய்வூதியர் நலன்களும் புதிய புதிய தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன. ஓய் வூதியம் என்பது அரசாங்கம் கருணையினால் வழங்கும் சலுகை அல்ல. சமூகப் பாதுகாப்பு ஏற்பாட்டின் ஒரு அம்சம் என்ற முறையில் ஓய்வூதியம் ஒரு அடிப்படை உரிமையாகும்.

அரசு ஊழியர்களின் பென்சன், சிசிஎஸ் (பென்சன் ரூல்ஸ்) 1972ன் படி நிர்வகிக்கப்படு கிறது. பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு 1972 பென்சன் விதிகளில் 37ஏ பிரிவு இணைக்கப் பட்டு பென்சன் வழங்கப்படுகிறது. இடை யில் பாஜக அரசாங்கம் 1.1.2004க்குப் பிறகு பணியில் சேருபவர்களுக்கு ஒரு புதிய பென் சன் திட்டத்தைக் கொண்டு வந்துவிட்டது. 1972 பென்சன் விதிகளின் பாதுகாப்பு அம்சங் கள் புதிய பென்சன் திட்டத்தில் இல்லை. 1972 பென்சன் விதிகளின்படி பென்சனுக்கு அரசு வழங்கியுள்ள உத்தரவாதம் புது பென் சன் திட்டத்துக்கு இல்லை. புதிய திட்டத்தின் படி ஊழியர்கள் தங்களது சம்பளத்தில் ஒரு பகுதியை பென்சனுக்காக மாதா மாதம் செலுத்த வேண்டும். அதற்கு இணையான தொகையை அரசாங்கமும் வழங்கும். இவ் வாறு சேரும் பென்சன் நிதி, தனியார் பென்சன் நிதிக் கம்பெனிகளிடம் அவர்கள் நிர்வாகத் தில் விடப்படும். இந்த பென்சன் நிதிக் கம்பெ னிகள் கொழுத்த லாபம் ஈட்டும் ஆசையில் ஊழியர்களின் பென்சன் நிதியை பங்குச் சந் தையில் முதலீடு செய்யும். அதில் கிடைக் கும் லாபத்திலிருந்து பென்சன் வழங்கப்படும். எனவே ஊழியர்களின் பென்சன், பங்குச்சந் தையின் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்றாற்போல் ஊசலாடிக் கொண்டே இருக்கும். சமீபத்தில் அமெரிக்காவில் இத்தகைய பென்சன் நிதிக் கம்பெனிகள் திவாலாகிவிட்டன. எனவே ஓய்வூதியர்கள் தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டது.

ஐ.மு.கூட்டணி -1 அரசாங்கம் பிஎப்ஆர் டிஏ (ஞநளேiடிn குரனே சுநபரடயவடிசல யனே னுநஎநடடியீஅநவே ஹரவாடிசவைல) சட்டத்திற்கான சட்ட முன்வரைவைக் கொண்டு வந்தது. மார்க்சிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் இந்த சட்ட முன் வரைவைக் கடுமையாக எதிர்த்தன. இடது சாரிக் கட்சிகளின் ஆதரவோடுதான் அந்த அரசாங்கம் நிலைத்திருக்க முடியும் என்ப தால் அந்த சட்ட முன்வரைவு கிடப்பில் போடப்பட்டது. 15வது நாடாளுமன்றத் தேர்த லின் முடிவில் இந்த நிலைமை மாறியது. இடதுசாரிக்கட்சிகளின் ஆதரவு தேவையில் லாமலேயே புதிய ஐ.மு.கூட்டணி-2 அரசாங் கம் அமையும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்தச் சூழ் நிலையைப் பயன்படுத்தி “பென்சன் சீர்திருத்த” நடவடிக்கைகளைச் செயல்படுத்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் தீவிரமான முயற்சியில் இறங்கியுள்ளது. பென்சன் நிதி முறைப்படுத்துதல் மற்றும் வளர்ச்சிக்கான ஆணையம் உருவாக்குவதன் நோக்கம், மத்திய அரசின் கைகளில் பாதுகாப்பாக இருக்கும் பென்சன் நிதியை தனியார்மய மாக்குவதைத் தவிர வேறொன்றுமல்ல.

6வது ஊதியக்குழு, தொலைத்தொடர்பில் 1 லட்சத்து 47 ஆயிரம் ஓய்வூதியர்கள் இருப் பதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந் தது. இன்று அது இன்னும் அதிகமாகியிருக்கும். நாடு முழுவதும் பல்வேறு சிறிய சிறிய அமைப் புகளில் சிதறிக்கிடக்கும் ஓய்வூதியர்களை ஒரு வலுவான அகில இந்திய அமைப்பின் கீழ் ஒன்றுதிரட்ட வேண்டிய வரலாற்று ரீதி யான தேவை ஏற்பட்டுள்ளது. எனவேதான் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் இந்த கடமை யை நிறைவேற்றுவதற்காக 21.10.2009ல் ஓய்வூதியர் அகில இந்திய கருத்தரங்கை தில் லியில் நடத்தியது. 21 மாநிலங்களிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சிஐடியு தலைவர் எம்.கே.பாந்தே கருத்தரங்கைத் துவக்கி வைத்து உரையாற்றினார். பிரதிநிதி களின் பலத்த கரவொலிக்கிடையே ‘அகில இந்திய பிஎஸ்என்எல்-டாட் ஓய்வூதியர் சங்கம்’ (ஏஐபிடிபிஏ) என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது.

தமிழகத்தில் டிசம்பர் 2009ல் மாநில அமைப்பு ஏற்படுத்தப்பட்டு திறம்பட செயல் பட்டு வருகிறது. வலுவான மாவட்டச் சங்கங் கள் உருவாகி நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பின்னணியில் தமிழ் மாநில துவக்க மாநாடு 31.10.2010ல் கோவை யில் நடைபெறவுள்ளது. கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜனை தலை வராகக் கொண்ட வரவேற்புக்குழு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

தமிழகத்தில் டிஒடி மற்றும் பிஎஸ்என் எல் ஓய்வூதியர்களைத் திரட்டும் பணியில், அவர்களின் நலன்களைக் காத்து நிற்கும் போராட்டங்களில் ஏஐபிடிபிஏ தமிழ் மாநில மாநாடு ஒரு மைல்கல்லாக அமையும் என்ப தில் சந்தேகமில்லை.

கட்டுரையாளர், அகில இந்திய துணைத்தலைவர், ஏஐபிடிபிஏ

நன்றி : "தீக்கதிர்"

Tuesday, September 7, 2010

திருப்பூர் கிளைகள் இணைந்து நடத்திய மாபெரும் ஆர்பாட்டம்







-----------------------------------------------------------------


BSNLEU,NFTEBSNL,FNTO,SNEA
திருப்பூர் கிளைகள் இணைந்து நடத்திய மாபெரும் ஆர்பாட்டம்
------------------------------------------------------------

இடம் : மெயின் தொலைபேசி நிலையம் திருப்பூர்
நாள் : 03/09/2010

கோரிக்கைகள்
--------------

* விலைவாசி உயர்வு
* BSNLமற்றும் பொதுத்துறை பங்குகளை விற்காதே
* தொழிலாளர் நலச்சட்டங்களை அமுல்படுத்து
* தேங்கிக்கிடக்கும் பிரச்சினை களை தீர்வு செய்

Friday, August 13, 2010

"தினமணி" யில் கருத்துக்களம்

பரிதாப நிலையில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள்
================================================
எஸ்.ஸ்ரீதுரை

09 Aug 2010

நமது நாட்டில் தொலைத் தொடர்புச் சேவைகளை வழங்கிவரும் நிறுவனங்களில் மிக முக்கியமானது பி.எஸ்.என்.எல். நிறுவனம்.

எத்தனையோ தனியார் நிறுவனங்கள் அந்தச் சேவைகளை வழங்கிவந்தாலும், லாப நோக்கமில்லாமல் கிராமப்புறங்களில்கூட தொலைத்தொடர்பு சேவையை வழங்கிவருவது பி.எஸ்.என்.எல். நிறுவனம்தான்.

பி.எஸ்.என்.எல். என்ற அரசுத்துறை நிறுவனம் அலைபேசி (செல்போன்) சேவையை வழங்கத் தொடங்கியதால்தான், அதுவரை இன்கமிங் அழைப்புகளுக்கும் கட்டணம் நிர்ணயித்துக் கொள்ளை லாபம் ஈட்டிவந்த தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் ஆட்டத்தைக் குறைத்துக் கொண்டன. நிமிடத்துக்கு பத்துப் பைசா, நொடிக்கு ஒரு பைசா என்றெல்லாம் அப்போது இணைப்புக் கொடுக்கிறபோதும் லாபம் பார்க்கும் அந்தத் தனியார் நிறுவனங்கள் பி.எஸ்.என்.எல். அலைபேசிச் சேவைக்கு வருவதற்கு முன்பு அடித்த லூட்டி எத்தகையது என்பதை இப்போது கற்பனை கூடச் செய்ய முடியாது.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இப்போது 3 லட்சம் நிரந்தர ஊழியர்களும், 1 லட்சம் ஒப்பந்தப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்தப் பணியாளர் என்றாலே தெரிந்துவிடுமே அவர்களது பணி நிரந்தரமானது இல்லை என்று.

""கட்டணம் கொடுத்து வேலை வாங்கு; வேலை முடிந்ததும் துரத்திவிடு'' என்ற தனியார்துறை சித்தாந்தத்தை அரசுத்துறைகளும் கையாளத் தொடங்கியதே இந்த அவலத்துக்குக் காரணம் எனலாம். ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துக்காக வரவு செலவுக் கணக்கில் (பட்ஜெட்டில்) ஆண்டுதோறும் அதிக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டியிருப்பதால், 1986 முதலே மத்திய அரசில் பல்வேறு துறைகளில் பெரிய அளவில் ஆளெடுப்புகள் நடைபெறவில்லை.

"டிபார்ட்மெண்ட் ஆஃப் டெலிகாம்' ஆக இருந்து, இப்போது பி.எஸ்.என்.எல். ஆக மாறியுள்ள துறையிலும் இதுவே உண்மைநிலை.

அவ்வப்போது ஒரு சில நூறு தொழில்நுட்ப உதவியாளர், உதவிப் பொறியாளர் போன்ற பதவிகளுக்கு ஆள் எடுக்கப்பட்டாலும் லைன்மேன், கிளர்க், டெலிபோன் ஆபரேட்டர் போன்ற பதவிகளுக்கு ஏறக்குறைய புதிய நியமனங்களே இல்லை எனலாம்.

முன்பெல்லாம் லைன்மேன்களுக்கு உதவியாகப் பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த தாற்காலிகப் பணியாளர்களில் பெரும்பாலோர் பணிநிரந்தரம் பெற்று டெலிகாம் மெக்கானிக் போன்ற பணிகளுக்கு வந்துவிட்டதால், மேற்படி கேஷுவல் மஸ்தூர் மற்றும் ஆபீஸ் பியூன் போன்ற பணிகளை "காண்ட்ராக்ட் லேபர்கள்' எனப்படும் ஒப்பந்த ஊழியர்களே செய்துவருகிறார்கள்.

முன்பு கேஷுவல் மஸ்தூர்களுக்கு 10 ஆண்டுகள் ஆனாலும்கூட பணிநிரந்தரம் ஆகும் வாய்ப்பு இருந்தது. ஏனெனில் அவர்கள் நேரடியாக டிபார்ட்மெண்ட் ஆஃப் டெலிகாம்-இல் சம்பளம் பெற்று பணிபுரிந்து கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போதைய ஒப்பந்த ஊழியர்களோ, பி.எஸ்.என்.எல்.-லின் நேரடி ஊழியர்கள் அல்லர். நிர்வாகத்தால் ஒப்பந்தம் செய்யப்படும் ஒப்பந்தக்காரர்களின் கீழ் பணி செய்பவர்கள். அந்த ஒப்பந்தக்காரர்கள் இவர்களுக்கென ஊதியத்தை பி.எஸ்.என்.எல்.-லிடமிருந்து பெற்று அதன்பின் தங்களது ஒப்பந்த ஊழியர்களுக்குப் பட்டுவாடா செய்கிறார்கள். அதிகபட்சமாக மாதம் மூவாயிரம் ரூபாய் வரை மட்டுமே தரப்படும் அந்தத்தொகைகூட ஒவ்வொரு மாதமும் தாமதமாகவே வழங்கப்படுவது வருத்தத்துக்குரியது. மிகக்குறைந்தபட்சமாக வழங்கப்படும் சொற்ப சம்பளத்தையும் இவர்கள் பெறுவதற்குப் படாதபாடு படவேண்டியிருக்கும்.

ஒரு காலத்தில் லைன்மேன், டெக்னீஷியன், டெலிபோன் ஆபரேட்டர், கிளர்க் போன்ற பதவி வகிப்போர் எத்தனை முக்கியமோ, அப்படி இன்றைய ஒப்பந்தப் பணியாளர்களும் பி.எஸ்.என்.எல்.-லின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டனர். உயிர்நாடி என்றே சொல்லலாம்.

உண்மையைச் சொல்வதானால் எந்தவொரு அலுவலக வேலையையும் செய் என்றால் மறுக்காமல் செய்கின்றவர்களே பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள். இவர்களில் பலர் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, கம்ப்யூட்டர் தேர்ச்சி என்று பலதுறைத் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். பி.எஸ்.என்.எல். அரசுத்துறை நிறுவனம் என்பதால் என்றாவது ஒரு நாள் பணிநிரந்தரமும் பதவி உயர்வுகளும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்கிற இவர்களுக்கு வாரவிடுமுறை தவிர வேறு எந்தச் சலுகையும் கிடையாது. இவர்களில் பெரும்பாலானோர் ஏதோ ஓர் அசட்டு நம்பிக்கையில் திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளும் பெற்றுவிட்டனர். இந்த ஒப்பந்த ஊழியர்களுக்கென்று அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்களும் போராடி வருகின்றன.

பி.எஸ்.என்.எல். நிர்வாகமும், மத்திய அரசும் இந்த ஒப்பந்த ஊழியர்களின் குடும்பங்களின் நலனைக் கருத்தில் கொண்டாவது இவர்களுக்குப் பணிநிரந்தரமும் ஊதிய உயர்வும் வழங்கினால் பி.எஸ்.என்.எல்.-லின் சேவைகள் இன்னும் மேம்படும் என்பதில் ஐயமில்லை.

நன்றி தினமணி