Monday, November 21, 2011

ஏமாற்றம் தரும் புதிய பென்சன் திட்டம்!

நன்றி தீக்கதிர்

ஏமாற்றம் தரும் புதிய பென்சன் திட்டம்!

-க.ராஜ்குமார்

மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய பென்சன் திட்டம் பாரதிய ஜனதா தலைமையி லான தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் 2003-ல் கொண்டு வரப்பட்டது. 23-08-2003-ல் பிஎப்ஆர்டிஏ என்ற ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையம் அமைக் கப்பட்டது. 10-10-2003ல் மத்திய அரசு ஒரு நிர்வாக உத்தரவு பிறப்பித்ததின் மூலம் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு வரப்படுகிறது.

புதிய பென்சன் திட்டத்திற்கான மசோதா இந்த ஆண்டு (2011) மார்ச் மாதம் நாடாளு மன் றத்தில், பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவோடு தாக்கல் செய் யப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள மழைக்கால கூட்டத்தொடரில் இது நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை எதிர்த்து இதற்குமுன் வரலாறு கண்டிராத வகையில், மத்திய-மாநில அரசு ஊழியர் சம்மேளனங் கள், அகிலஇந்திய ஆசிரியர் கூட்டமைப்பு, பாதுகாப்புத்துறை, இரயில்வே மற்றும் பொதுத் துறை நிறுவன ஊழியர் சம்மேளனங்கள் ஒன் றிணைந்து இயக்கங்கள் நடத்தி வருகின்றன. வரும் நவம்பர் 25 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்று நாடுமுழுவ தும் கோடிக்கணக்கான மக்களிடம் புதிய பென்சன் மசோதாவிற்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்துக்களை பிரதமரிடம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசில்..

நாடாளுமன்றத்தில் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், புதிய பென் சன் திட்டம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு மத்திய நீதித்துறை இணை அமைச்சர் ஸ்ரீநமோநாராயண் மீனா அளித்த பதில்-

2004 ஜனவரி 1-க்குப் பிறகு, ஆயுதப் படை தவிர, மத்திய அரசில் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் அனைவரும் புதிய பென்சன் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

2010 ஏப்ரல் 30 வரை இத்திட்டத்தில் மத் திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங் களைச் சேர்ந்த 6 லட்சத்து 17 ஆயிரத்து 278 சந்தாதாரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த திட்டத்தை செயல்படுத்தி கண்கா ணித்திட ஊசுஹ எனப்படும் ஊநவேசயட சுநஉடிசன மநநயீiபே யனே ஹஉஉடிரவேiபே ஹபநnஉல ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.

ஊழியர்களின் ஊதியம் மற்றும் அகவி லைப்படியிலிருந்து மாதம் 10 விழுக்காடு பிடித்தம் செய்யப்படுகின்றது. அதே அள விற்கு மத்திய அரசாலும் செலுத்தப்படுகிறது .இவ்வாறு சேகரிக்கப்படும் நிதி மீள எடுக்கப் படாத வகையில் புதிய பென்சன் திட்டத்தின் கீழ் அடுக்கு-1 (சூடிn-றவைானசயற யடெந யீநளேiடிn வசைந-1 யஉஉடிரவே) ல் வைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் ஊழியர்கள் 60 வயது நிறைவடைந்தவுடன் விலகும்போது, சேர்ந்துள்ள பென்சன் தொகையில் 40 விழுக்காடு காப்பீடு முறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சிக் குழுமம் (ஐசுனுஹ-ஐளேரசயnஉந சுநபரடயவடிசல யனே னுநஎநடடியீஅநவே ஹரவாடிசவைல) ஒன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகை பெறும் வகையில் கட்டாயமாக முதலீடு செய்ய வேண்டும். மீதமுள்ள 60 விழுக்காட்டுத் தொகையை மொத்தமாக பெற்றுக்கொள்ளலாம்.

60 வயதிற்கு முன்னதாக இத்திட்டத்திலி ருந்து விலக வேண்டியிருந்தால் ஐசுனுஹக்கு 80 விழுக்காடு தொகை கட்டாயமாக செலுத் தப்பட வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் சேர்ந்த ஊழியர் ஒருவர் இடையில் இறந்துபோனால் ஓய்வூ தியக் கணக்கில் உள்ள தொகை முழுவதும் அவரது நியமனதாரருக்கு அளிக்கப்படும்.

இதுவரை இத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட ஊழியர்களுக்காக 4 ஆயிரத்து 181 கோடியே 97 லட்சம் ரூபாய் டிரஸ்டி வங்கிக்கு (வசரளவநந யெமே) செலுத்தப்பட்டுள்ளது.

இறப்பு, ராஜினாமா ஆகிய காரணங்களுக் காக தொகையை திரும்பக் கேட்டு

22 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தமிழ்நாட்டில்..

தமிழ்நாட்டில் இந்த திட்டம் 1-04-2003-லிருந்து அமல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 66,000-க்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஊழியர்களிடமிருந்து மட்டும் 10 விழுக் காடு தொகை ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. மாநில அரசு அதற்கு இணையான தொகையை (அயவஉாiபே உடிவேசiரெவiடிn) செலுத்தவில்லை...

தமிழக அரசு ஆணை எண்.222, நாள்

3-06-08-ல் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய் யப்பட்ட தொகைக்கு 8 சதவிகிதம் வட்டி வழங்கி ஆணையிட்டுள்ளது.

இந்த தொகையை பராமரிக்க மத்திய அரசு நியமனம் செய்தது போல் தனி நிறுவனம் ஏதும் அமைக்கப்படவில்லை. மாறாக அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை மாநில கணக்காயரிடம் அளிக்கப்பட் டுள்ளது. இது தொடர்பாக முறையாக சட்டம் அமலாக்கப்படாததால், மாநில கணக்காயர் இந்த தொகையை அனாமத்து கணக்கில் வைத்துள்ளார்.

மேலும் பஞ்சாயத்துகளில், பஞ்சாயத்து யூனியன்களில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வூதிய கணக்கினை மாநில உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை இயக்குனர் பராமரித்துவர அரசு ஆணையிட் டுள்ளது (அரசு ஆணை எண்.201, நிதி (ஓய்வூ தியம்), நாள் 21-05-2009). இதனால் இறந்து போன, இடையில் நின்றுவிட்ட அரசு ஊழியர் களுக்கு எவ்வித நிவாரணமும் இதுவரை வழங்கப்படவில்லை.

திரிசங்கு பென்சன்

புதிய பென்சன் திட்டமும் இல்லாமல் பழைய திட்டமும் இல்லாமல் தமிழ்நாடு அரசு ஆணை எண்.175, சமூக நலத்துறை, நாள்

15.9.2008 ல் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு ஓய்வூதிய திட்டம் என்று ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி சத்துணவு அமைப்பாளர், அங்கன் வாடி பணியாளர்களுக்கு ரூ.700, அங்கன் வாடி உதவியாளர் நிலை-ஐ சமையலர்களுக்கு ரூ.600, அங்கன்வாடி உதவியாளர் நிலை-ஐஐ சமையலர் உதவியாளர்களுக்கு ரூ.500 என மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்கி வருகிறது.

பொருளாதார வீழ்ச்சியில் சிக்கிய அமெரிக்காவில் பல லட்சம் கோடி ரூபாய் ஓய் வூதியத்தொகை மூழ்கிப்போனது. இதற்கு பிற கும் கூட மத்திய அரசு பிடிவாதமாக இதை உலக வங்கியின் நிர்ப்பந்தத்தின் காரணமாக அமல்படுத்துகிறது. பெரும் மூலதனத்தை திரட்டிட புதிய பென்சன் திட்டத்தை இன் றைய முதலாளித்துவ நாடுகள் பயன்படுத்து கின்றன.

பிற மாநில அரசுகளின் நடவடிக்கை..

மத்திய அரசு அமைத்துள்ள ஞகுசுனுஹ அமைப்போடு இதுவரை 15 மாநிலங்கள் உடன் படிக்கை மேற்கொண்டுள்ளன.

ஆனால் இதுவரை ஹரியானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள் மட்டும் பி.எப்.ஆர்.டி.ஏ.வில் 159 கோடி ரூபாய் செலுத்தியுள்ளன.

மற்ற மாநிலங்கள் கணக்கை பராமரிப்ப தில் சிரமம் உள்ளதால் பணம் செலுத்த முடிய வில்லை என்றும் கர்நாடக மாநிலம் பிஎப்ஆர் டிஏவில் சேர ஒரு சந்தாதாரருக்கு ஆண்டு கட்டணம் ரூ.450-ம் இணைப்புக் கட்டணம் ரூ.50 என்பது அதிகம் என்பதால் சேர யோசித்துக்கொண்டுள்ளன.

குஜராத்தில் கடந்த 5 வருடகாலமாக இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இது வரை 31,000 ஊழியர்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தொகை யை கையாள பண்டு மேனேஜர்களாக ஸ்டேட் பாங்க், எல்ஐசி மற்றும் யூடிஐ வங்கி கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன.

ஆந்திராவில் இந்த திட்டம், 1-09-2004 முதல் அமல்படுத்தப்படுகிறது. இது மத்திய அரசு அமைத்துள்ள பி.எப்.ஆர்டி.ஏ வுடன் உடன்படிக்கை செய்து கொண்டிருந்தாலும் நிதியை இதுவரை செலுத்தவில்லை.

கர்நாடகாவில் இந்த திட்டம் 1-04-2006 முதல் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இதுவரை 65,000 ஊழியர்கள் இந்த திட்டத் தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவும் மத்திய அரசு அமைத்துள்ள நிறுவனத்துடன் உடன் பாடு செய்துகொண்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் இந்த திட்டம் 2010 ஜனவரி முதல் அமல்படுத்தப்பட்டு வரப்படு கிறது.

மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மூன்று மாநில இடதுசாரி அரசுகள் இந்த புதிய பென்சன் திட்டத்தை அமல்படுத்தமாட் டோம் என அறிவித்தன. தற்போது கேரளத்தி லும், மேற்குவங்கத்திலும் அரசுகள் மாறிவிட் டதால் அங்கேயும் புதிய பென்சன் திட்டம் அமல் படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் பென்சன் மட்டுமின்றி, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்புத்திட்டம் என்ற பெயரில் அவர்களி டமிருந்து சந்தா தொகை பெற்று அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் நரியின் வாலை அறுத்து நரிக்கு சூப் வைத்து தருவது போல், இத்திட்டத்திற்கென மத்திய அரசு நிதி போது மான அளவிற்கு ஒதுக்காத காரணத்தினால் இந்திய நாடுமுழுவதும் பெரும்பான்மையான தொழிலாளர்கள் இத்திட்டத்தில் சேராமல் புறக்கணித்துவிட்டனர்.

பங்குச் சந்தைகளில் நிதி மூலதன குவிய லுக்கு வழி வகுக்கும் இந்த புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்து நாடுமுழுவதும் எதிர்ப் புக் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கை யில், ஆளுங்கட்சியான காங்கிரசும் எதிர்க்கட் சியான பாரதிய ஜனதாவும் கைகோர்த்துக் கொண்டு இந்த புதிய பென்சன் திட்டத்திற் கான மசோதாவை நிறைவேற்ற துடித்துக் கொண்டிருக்கின்றன. உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக உழைப்பாளி மக்கள் வெகுண்டு எழுந்து போராடிக்கொண்டுள்ள நிலையில், புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்து இந்திய நாட்டு தொழிலாளிவர்க்கம் இதை எதிர்த்து நடத்தும் போராட்டமே உழைப்பாளி மக்களின் உரிமைப் போராட்டமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

நன்றி தீக்கதிர்

Sunday, November 20, 2011

THEHINDUநாளிதழ் செய்தி


Telecom employees affiliated to Bharat Sanchar Nigam Limited Employees Union (BSNLEU) on Tuesday commenced a district-wide signature campaign against the planned reintroduction of Pension Fund Regulatory Development Authority (PFRDA) Bill in the coming session of Parliament.

“The PFRDA Bill is the most obnoxious piece of legislation because it gives the government enormous power to unsettle one of the best social security schemes called pension,” Mohammed Jaffer, organizing secretary, BSNLEU (Tamil Nadu circle), told The Hindu.

According to him, the Bill, if enacted, will empower the Government to alter or even deny the present employees and pensioners the statutory defined benefit as in the case of those staff appointed after the cut-off date of April 1,2004, since the contribution of employees share for the years of service would be put in the stocks to generate pension.

“This new scheme, thus, will make the vagaries of the stock market to decide the pensioners' future which is unfortunate,” he said.

The BSNLEU plans to collect 25,000 signatures from BSNL employees, trade union representatives and general public in the district as part of the campaign.

“The signatures expressing the dissent over the Bill will be submitted to Lok Sabha speaker on November 25,” Mr. Jaffer said. To start with, the BSNLEU obtained the signature in support of their campaign from CPI(M) leader K. Thangavel, MLA.






கையெழுத்து இயக்கம் , MPக்களுக்கு மனு கொடுத்தல்




























கோவையில் பல்வேறு போராட்டகாட்சிகள்